கொரோனா வைரசின் பாதிப்பு, பங்கு சந்தைகள் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 872 ரூபாய் அதிகரித்து, வரலாற்றில் முதல் முறையாக 40,000 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.இந்நிலையில், சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 109 ரூபாய் அதிகரித்து, 5013 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.